இந்த சூழ்நிலையில் தான் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக என கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும் விஜய் விமர்சித்தார். இந்த நிலையில் தான் கரூரில் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தமிழக அரசும் தவெகவை குற்றம் சாட்டியது. பல மணி நேரமாக விஜய் காலதாமதமாக வந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவும் பாஜகவும் களம் இறங்கியது.