மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ். பண்டிகைக் காலத்திற்கு முன்பாகவே 4% அகவிலைப்படி உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு முதல் நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 8வது ஊதியக் குழு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். இப்போதைக்கு அமல்படுத்தாவிட்டாலும், முழுப் பணமும் நிலுவைத் தொகையாகக் கிடைக்கும். இதற்கிடையே மற்றொரு சர்ப்ரைஸ் தகவலும் வந்துள்ளது.
25
அகவிலைப்படி 63% ஆக உயரக்கூடும்
பண்டிகைக் காலத்திற்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வரலாம் எனப் பேசப்படுகிறது. அதன்படி, அகவிலைப்படி 63% ஆக உயரக்கூடும். இந்தத் தொகை செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
35
மீண்டும் ஒரு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த உயர்வால் சுமார் 55 லட்சம் ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைகின்றனர். ஜனவரி மாத உயர்வுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஒரு அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இந்த முறை அகவிலைப்படி ஒரேயடியாக 4% உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஊழியர்களுக்கு 64% வரை அகவிலைப்படி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 64% என்பது ஒரு கோரிக்கையாக இருந்தாலும், அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அறிவிப்பு வெளியான பிறகே கூடுதல் பணம் கிடைக்கும். இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.
55
மே மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இதற்கிடையில், 8வது ஊதியக் குழு குறித்த விவாதங்களும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.80 முதல் 3.83 வரை உயர்த்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 8வது ஊதியக் குழுவின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க குழுவுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 மே மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.