இல்லத்தரசிகளுக்கு விருப்பமான தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
25
சவரனுக்கு ரூ.44 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து புது உச்சத்தை தொட்டது. நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
35
கடந்த சில நாட்களாக ஒரு விலையில் தங்கம் விற்பனை ஆனது. அட்ச திருதியை வேறு வருவதால், தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது.
45
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனையானது.
55
இன்றைய (ஏப்ரல் 18) நிலவரப்படி, நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. தங்க விலையில் மாற்றமில்லாமல், 2வது நாளாக தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.