அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. 2026 ஜனவரி 1 முதல் புதிய ஊதியம் நடைமுறைக்கு வருவதாகக் கருதப்படுவதால், இடைப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை (Arrears) மொத்தமாக வழங்கப்படும்.
உதாரணத்திற்கு:
• உங்கள் தற்போதைய ஊதியம்: ₹45,000
• புதிய ஊதியக் குழுவின் கீழ் உயர்வு: ₹50,000
• மாதாந்திர வித்தியாசம்: ₹5,000
• அமலாக்கத்தில் 15 மாதங்கள் தாமதம் ஏற்பட்டால், நீங்கள் பெறப்போகும் மொத்த நிலுவைத் தொகை: ₹75,000
இந்த நிலுவைத் தொகைக்கு வருமான வரி உண்டு. சம்பள உயர்விற்குப் பிறகு பெரும்பாலான ஊழியர்கள் 30% வரி வரம்பிற்குள் வர வாய்ப்புள்ளதால், நிலுவைத் தொகைக்கும் அதே விகிதத்தில் வரி விதிக்கப்படும்.