8th Pay Commission: இந்த ஒரு முடிவு எடுத்தா போதும்... ரூ.29 லட்சம் வரை கூடுதல் சம்பளம்?! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

Published : Sep 04, 2026, 06:44 AM IST

8வது சம்பள கமிஷன் கூட்டம் ஜெய்ப்பூரில் முடிவடைந்துள்ளது. அடுத்த கூட்டம் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில். ஜெய்ப்பூர் கூட்டத்தில், ஊழியர்சங்கங்கள் 8வது சம்பள கமிஷன் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தன.

PREV
16
ஜெய்ப்பூரில் 8வது சம்பள கமிஷன் கூட்டத்தில் கோரிக்கை
ஜெய்ப்பூரில் 8வது சம்பள கமிஷன் கூட்டம் முடிவடைந்துள்ளது. அடுத்த கூட்டம் செப்டம்பர் 7, 8 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கிறது. ஜெய்ப்பூர் கூட்டத்தில், ஊழியர் சங்கங்கள் வருடாந்திர சம்பள உயர்வு பற்றி முக்கியமாக விவாதித்தன. சம்பள உயர்வு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தின.
26
பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இந்த உயர்வு போதாது
தற்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 3% சம்பள உயர்வு கிடைக்கிறது. ஆனால், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இந்த உயர்வு போதாது என ஊழியர்கள் கருதுகின்றனர். எனவே, வருடாந்திர சம்பள உயர்வை குறைந்தபட்சம் 7% ஆக அரசு நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
36
சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் எவ்வளவு உயரும்?
அகில இந்திய புதிய ஓய்வூதியத் திட்ட ஊழியர் சம்மேளனம் (AINPSEF) 7% வருடாந்திர சம்பள உயர்வு வேண்டும் என கோரியுள்ளது. ஒருவேளை ஊழியர்களுக்கு 7% சம்பள உயர்வு கிடைத்தால், அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் எவ்வளவு உயரும் என்று பார்க்கலாம்.
46
மொத்த சம்பளம் பலமடங்கு அதிகரிக்கும்
உதாரணமாக, ஒரு லெவல் 8 ஊழியரின் அடிப்படை சம்பளம் 47,600 ரூபாய் என வைத்துக்கொள்வோம். 8வது சம்பள கமிஷனில் 2.15 ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், மொத்த அடிப்படை சம்பளம் 1,02,340 ரூபாயாக உயரும். இதனுடன் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) சேர்ந்தால் மொத்த சம்பளம் இன்னும் அதிகரிக்கும்.
56
ஒவ்வொரு ஆண்டும் 7% உயர்வு
இந்த அடிப்படை சம்பளத்தில் ஒவ்வொரு ஆண்டும் 7% உயர்வு கொடுத்தால், முதல் ஆண்டில் சம்பளம் 12,28,080 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டில் 13,14,046 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டில் 14,06,029 ரூபாயாகவும், நான்காம் ஆண்டில் 15,04,451 ரூபாயாகவும், ஐந்தாம் ஆண்டில் 16,09,762 ரூபாயாகவும் இருக்கும்.
66
கூடுதலாக 29 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு
இதேபோல, 7% உயர்வு அடிப்படையில் கணக்கிட்டால், பத்தாவது ஆண்டில் ஆண்டு சம்பளம் 1,69,67,703 ரூபாயாக உயரும். அதாவது, 7% உயர்வு அமலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் சம்பளத்தில் இருந்து மட்டும் கூடுதலாக 29 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories