பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவரால் வீட்டில் தினசரி பிரச்சனைகள் வெடித்த வண்ணம் உள்ளன. பிரதீப்பை வெளியேற்றியதற்கு சுமால் பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை புல்லி கேங் எனப்படும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் சேர்ந்து அட்டாக் செய்தது பிரதீப்புக்கான ஆதரவை எகிற வைத்தது. இதனால் மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரும் முடிவில் பிக்பாஸ் டீம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.