அவர்களின் லிஸ்ட்டில் இருக்கும் நபர்கள் இரண்டு பேர், ஒன்று விஜய் சேதுபதி, மற்றொன்று நயன்தாரா. நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் இருவருக்கும் இடையே தான் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்கிற போட்டி நிலவுகிறது. விஜய் சேதுபதி இதற்கு முன்னரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் நயன்தாரா இதுவரை எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் அவர் சினிமாவுக்கு வரும் முன்னர் தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இரண்டாவது திருமணம்... சமந்தாவின் முடிவு என்ன? அவரே அளித்த சூசக பதில் இதோ