சம்பள விஷயத்தில் லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி! பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published Dec 19, 2022, 11:55 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜனனி, எலிமினேட் ஆகி வெளியேறிய பின் வாங்கிய சம்பளத்தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கெடுத்தனர்.

இவர்கள் இருவருக்குமே இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் கிடைத்தது. இதையடுத்து இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். குறிப்பாக லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நடிப்பில் பிசியாகிவிட்டார்.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனிலும் இலங்கையை சேர்ந்த 2 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஏடிகே மற்றொருவர் ஜனனி. இதில் ஏடிகே பாடகராக அறியப்பட்டவராக இருந்தாலும், ஜனனி புதுமுகமாகவே பங்கேற்றார். இவர் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்கும் முன்பே இவருக்கென டுவிட்டரில் ஆர்மி உருவாக்கினர்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு லீவு விட்டு.. வெள்ளை நிற புடவையில் வேறலெவல் கியூட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்

அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது சலிப்படைய செய்தது. இதன்காரணமாக கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளத்தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். அப்படி பார்த்தால் மொத்தம் இவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 70 நாட்களுக்காக ரூ.17 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கையில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளரான லாஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

click me!