டேஞ்சர் ஜோனில் 3 பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

First Published Dec 30, 2022, 12:41 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா தவிர எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களுமே இடம்பெற்று உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், ரச்சிதா, மைனா, கதிரவன், அமுதவாணன், ஷிவின், ஏடிகே, மணிகண்டன் ஆகிய 9 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா தவிர எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களுமே இடம்பெற்று உள்ளனர். இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டதால், எந்தவித சண்டை சச்சரவுகள் இன்றி சென்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர். நேற்றுடன் இந்த டாஸ்க் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் உள்ள 8 போட்டியாளர்களில் அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை. இதற்கு அடுத்தபடியாக ஷிவின் உள்ளார். இதனால் அவரும் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விடுவார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்குள் காதலியுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்த கதிரவன்... பார்த்ததும் மனமுடைந்து கதறி அழுத ஷிவின்

எஞ்சியுள்ள கதிரவன், மைனா, ஏடிகே, மணிகண்டன் மற்றும் அமுதவாணன் ஆகிய 5 பேருக்கும் இடையே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசங்களே உள்ளன. இவர்கள் 5 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக ஏடிகே இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் அதிகளவில் புரணி பேசும் நபராக ஏடிகே இருந்து வருவதாக நீண்ட நாட்களாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த வாரம் அவர் அசீமை உருவகேலி செய்து பேசியதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் நல்ல படம்... அது பிளாப் ஆனதற்கு அவர்கள் தான் காரணம்- என்ன வடிவேலு இப்படி சொல்லிட்டாரு?

click me!