4. மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவர்கள். இவர்கள் இயல்பாகவே ஒழுக்கம், கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களின் நிதி அணுகுமுறை மிகவும் தீவிரமானது. நீண்ட கால ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.
தங்கள் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை திட்டமிட்டு, அனாவசியமான செலவுகளை தவிர்த்து, ஒவ்வொரு ரூபாயும் சேமித்து புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு பெரிய செலவு செய்வதற்கு முன்னர் அதன் நன்மை, தீமைகளை முழுமையாக ஆராய்வார்கள்.
தன்னிச்சையான அல்லது ஆடம்பர செலவுகளை அவர்கள் முற்றிலும் வெறுக்கிறார்கள். இவர்களின் தீவிர சேமிப்புப் பழக்கம் சிலருக்கு கஞ்சத்தனமாக தோன்றலாம். அவர்கள் நீண்ட கால நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால் சிறிய இன்பங்களுக்காக அவர்கள் செலவு செய்வதில்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)