இந்த மூன்று ராசிகளுக்கும் கடனே இருக்காது.! சொத்து மட்டுமல்ல பதவி யோகமும் உண்டாம்.!

Published : Jul 29, 2025, 05:30 AM IST

ரிஷபம், கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சனை இருக்காதாம். இவர்கள் நிதி விஷயங்களில் சிறந்து விளங்குவதோடு, சொத்து சேர்க்கும் யோகமும் உண்டு. குரு, செவ்வாய் பலன்கள், சிறந்த திசைகள் இவர்களுக்கு மேன்மையைத் தரும்.

PREV
15
பணம், பதவி, சொத்து

ஜோதிட நிபுணர்களின் கருத்துபடி சில ராசிகளுக்கு கடைசி காலம் வரை கடனே இருக்காதாம். செல்வம் என்று வந்தால், பலருக்கும் அது கடன் இல்லாமல் கிடைப்பது என்பது சாத்தியமற்றதாய் தோன்றலாம். ஆனால், சில ராசிக்காரர்கள் அதனை தவிர்ப்பதற்கே பிறந்தவர்கள். அவர்களுக்கு கடனே இருக்காதாம். அப்படி கடன் வாங்கினாலும் அது குறைந்த காலத்தில் தீர்ந்துவிடும். அதேபோல், இந்த ராசிக்காரர்களுக்கு சொத்தும் சேரும், சமூகத்தில் ஒரு நிலைமையும் உருவாகும். இவர்களது ராசியில் சிறந்த திசைகள், குருப்பலன், செவ்வாய் வலிமை ஆகியவை இவர்களை உயரும் பாதையில் அழைத்துச் செல்லும்.

25
ரிஷபம் (Taurus)

நல்லதை விதைத்து நல்லதை மட்டும் அறுவடை செய்யும் அதிரஷ்டசாலிகளான ரிஷப ராசி நேயர்களுக்கு கடன் என்பதை எளிதில் கடந்து செல்லும் யோகம் கிடைக்குமாம். இந்த ராசிக்காரர்கள் நிலைத்தன்மையுடன், பொறுப்புடன் வாழக்கூடியவர்கள் என்பதால் வெற்றி எப்போதும் இவர்கள் வீட்டு வாசலில் குடியிருக்கும். வீண் செலவுகளை தவிர்த்து, ஒவ்வொரு பணத்தையும் சேமிக்கத் தெரிந்தவர்கள் ரிஷப ராசியினர். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை விரைவில் முடித்துவிடும் யோகமுள்ளது. சொத்து சேர்ப்பதில் அதிர்ஷ்டசாலிகள் ரிஷப ராசியினர். தொழில், வியாபாரம், முதலீடுகளில் மேன்மை காண்பார்கள்.

பதவி யோகம்: அரசு துறைகளில், தனியார் நிறுவனங்களில் மேலாளராய் பதவி உயர்வு ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

வழிபாடு: வெள்ளிக்கிழமை சிவப்பு மலர்களால் லட்சுமி தேவியை பூஜிக்கவும்.

பரிகாரம்: தினமும் “ஓம் மகாலட்ச்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.

35
கடகம் (Cancer)

நேர்மையின் பிறப்பிடமான கடக ராசியினர் மிகவும் குடும்பப்பற்று கொண்டவர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கணக்கு வைத்து செயல்படுவார்கள். வியாபாரம், உத்தியோகம், கலைதுறை என எந்த துறையிலும் நிதானமாக முன்னேறுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் கடன் இல்லாமல் செய்து முடிக்கும் பாக்கியம் இவர்களுக்குண்டு. வீடு வாங்கும் ஆசை நிச்சயமாக நிறைவேறும்.

பதவி யோகம்: கல்வித்துறையில், மருத்துவத் துறையில் உயர்நிலை வாய்ப்புகள். அரசியல், ஐடி

வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் (காளி அல்லது மாரியம்மன்)

வழிபாடு: அமாவாசை நாளில் அல்லது திங்கட்கிழமைகளில் அம்மனை வழிபடலாம்.

பரிகாரம்: "ஓம் அயி காளிகே நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 21 முறை ஜெபிக்கவும். விரதமிருந்தால் சிறந்தது.

45
கும்பம் (Aquarius)

கும்பராசி நேயர்களுக்கு அறிவும் அனுபவமும் அதிகமாக இருக்கும். வியாபாரம், பங்கு முதலீடு, புதிய தொழில்கள் போன்றவற்றில் அதிர்ஷ்டத்தால் உயர்வு கிடைக்கும்.. பணத்தை நுணுக்கமாக கையாள்வதிலே வல்லவர்கள். நல்ல யோசனைகளால் கடனை குறைந்த காலத்தில் தீர்த்து விடுவார்கள். இவர்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.

பதவி யோகம்: அரசியல், சமூக சேவை, மேனேஜ்மெண்ட் துறைகளில் பெரிய உயர்வுகள்.

வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி அல்லது சக்திவிநாயகர்

வழிபாடு: வியாழக்கிழமைகளில் இலையுடன் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

பரிகாரம்: "ஓம் கம் கணபதயே நமஹ" ஜபத்தை 54 முறை செய்வது நல்லது.

55
மகிழ்ச்சி, சந்தோஷம், அதிர்ஷ்டம்

ரிஷபம், கடகம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் தங்களை நம்பி செயல் பட வேண்டியவர்கள். செவ்வாய்க்கிழமையில் பச்சை, வெள்ளிக்கிழமையில் வெள்ளை மற்றும் வியாழக்கிழமை மஞ்சள் உடைகளை அணிவது அதிர்ஷ்டம் தரும். வருடத்தில் ஒரு முறை நவகிரக ஹோமம் செய்யலாம். சேமித்து வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் – இது பணத்தின் செலவை கட்டுப்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories