சுக்ராதித்ய ராஜயோகம் என்பது சூரியன் மற்றும் சுக்கிரன் 2 கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் பொழுது உருவாகும் சுபமான யோகமாகும். சூரியன் தன்னம்பிக்கை, கவுரவம், ஆற்றல், தலைமைப் பண்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் காதல், செல்வம், ஆடம்பரம், செழிப்பு, திருமண வாழ்க்கை மற்றும் கலைகளை குறிக்கும் கிரகமாகவும் அறியப்படுகின்றனர்.
துலாம் ராசி என்பது சூரிய பகவானுக்கு பலவீனமான ராசியாகும். இந்த ராசியில் சூரியன் குறைவான பலன்களையே வெளிப்படுத்துவார். இந்த நிலையில் நவம்பர் 2, 2025 சுக்கிரனும் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இந்த எதிரெதிர் கிரகங்களின் விளைவு அவ்வளவு சுபமானதாக கருதப்படவில்லை.
இருப்பினும் இந்த இரு கிரகங்கள் இணையும் பொழுது உருவாகும் சுக்ராதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.