சனி பகவான் கடின உழைப்பு, நீதி, கட்டுப்பாடு, கர்ம வினைகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் இத்தனை நாட்களாக வக்ர நிலை அதாவது பின்னோக்கிய நிலையில் பயணித்து வந்தார். அப்போது ஏற்பட்டிருந்த தடைகள், தாமதங்கள், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இருத்தல், மனச்சோர்வு ஆகிய நிலைகள் நவம்பர் 28-க்குப் பிறகு மாற இருக்கிறது.
அதேபோல் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம், குழந்தைகள் ஆகியவற்றின் காரகராக விளங்கும் குரு பகவான் கடக ராசியில் நவம்பர் 11 ஆம் தேதி உச்சம் பெறுவது சுபமான நிலையாகும். இந்த இரண்டு கிரக நிலைகளும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உள்ளன.