ராகு தற்போது கும்ப ராசியில்தான் இருக்கிறார். டிசம்பர் வரை இதே ராசியில் சஞ்சரிப்பார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் கஷ்டங்களும், பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது. மற்றவர்களின் வார்த்தைகள் மனரீதியாகப் பாதிக்கும். உடல்நலத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்கள் முடிந்தவரை பொறுமையாக இருப்பது அவசியம். குறிப்பாக, வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் தடைகளை உருவாக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.
பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி அல்லது சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோருக்கு அல்லது முதியோர்களுக்கு உங்களால் இயன்ற அளவு கருப்பு உளுந்து, கறுப்பு ஆடை அல்லது இனிப்பு இல்லாத வாழைப்பழங்களை தானமாக வழங்கலாம்.
இதையும் படிங்க: உயிரே போனாலும் ரகசியம் காக்கும் டாப் 3 ராசிக்காரர்கள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh