ராகு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 2026 வரை அக்னி பரீட்சை! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Published : Jun 27, 2026, 02:34 PM IST

Rahu Mars Conjunction 2026: ராகு-செவ்வாய் சேர்க்கையால் டிசம்பர் 2026 வரை 3 ராசிகளுக்கு கடுமையான காலக்கட்டம் இருக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்? என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
ராகு பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகுவிற்கு என்று தனிப்பட்ட சொந்த ராசி எதுவும் கிடையாது. இவர் எப்போதும் வக்ர கதியிலேயே யணிக்கக்கூடியவர். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், வரவிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி செவ்வாயின் ஆதிக்கம்பெற்ற அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

ராகுவும் செவ்வாயும் இணையும் போது அல்லது தொடர்பு கொள்ளும்போது ஜோதிடத்தில் அது 'அங்காரக யோகம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உக்கிரமான ஒரு யோகமாகும். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலித்தாலும், டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ள இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கடுமையான மன உளைச்சல், தவறான முடிவுகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அங்காரக யோகத்தால் அக்னி பரீட்சையை சந்திக்கப்போகும் அந்த 3 ராசிகள் யார் யார் மற்றும் அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

24
மேஷம் (Aries)

அங்காரக யோகத்தின் தாக்கம் மேஷ ராசியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக பண விஷயங்களில் நீங்கள் வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டாம். அவசரப்பட்டு செய்யும் முதலீடுகள் நஷ்டத்தில் முடியலாம். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சிறிய உபாதையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் கவலையைத் தரலாம்.

முக்கிய அறிவுரை: அவசரப்பட்டு எந்த ஒரு நிதி சார்ந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்; பொறுமை மட்டுமே உங்களை காக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு, கந்த சஷ்டி கவசம் படித்து வர அசுப பலன்கள் குறையும்.

34
விருச்சிகம் (Scorpio)

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்த அங்காரக யோகம் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் தடைகளும், தோல்விகளும் வந்து போகலாம். வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் பணப் பரிவர்த்தனைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும். தேவையற்ற ரிஸ்க் எடுப்பதை முற்றிலும் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் வரலாம்.

பொருளாதாரம்: எதிர்பாராத செலவுகள் உங்கள் பட்ஜெட்டை துளைத்து எடுக்கும். புதிய முதலீடுகளை தள்ளிப்போடுவது நல்லது.

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி, ராகு கால பூஜை செய்து வர மன அமைதி கிடைக்கும்.

44
தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலகட்டத்தில் 'வாக்கே' மிகப்பெரிய ஆயுதமாக மாறும். எனவே, பேசும் வார்த்தைகளில் நிதானம் மிக மிக முக்கியம். உங்களின் முரட்டுத்தனமான பேச்சு குடும்பத்திலும், வெளியிலும் தேவையற்ற விரிசல்களையும், சண்டைகளையும் உருவாக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அமைதியைக் கடைப்பிடிப்பது மட்டுமே ஆபத்தில் இருந்து உங்களைக் காக்கும்.

பண இழப்பு: நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்ற எதிலும் பணத்தைப் போட வேண்டாம். 

பரிகாரம்: சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் கால பைரவரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து வர ராகுவின் பாதிப்புகள் குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories