Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!

Published : Feb 04, 2026, 10:55 AM IST

Athiganda Yogam in Tamil: பஞ்சாங்கத்தின்படி, இன்று உருவாகும் அதிகண்ட யோகம் சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் முடிவுகள், பேச்சு மற்றும் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். 

PREV
15
அதிகண்ட யோகம் 2026

வானியல் அமைப்புகளின் படி இன்று ராகு காலம் மதியம் 12:35 முதல் 1:57 வரை இருக்கும். இந்த நேரத்தில் அதிகண்ட யோகம் தொடங்கும். ஜோதிட ரீதியாக அதிகண்டம் என்பது சவால்களை குறிக்கும் யோகமாகும் இது தடைகள் எதிர்பாராத செலவுகள் அல்லது மன உளைச்சலைத் தரக்கூடும் 

அதேபோல் சந்திரன் சிம்ம ராசியில் பயணிப்பதால் சில ராசிகளுக்கு சந்திராஷ்டமம் அல்லது பாதகமான நிலைகளை உருவாக்கலாம். இந்த நிலைகள் காரணமாக சில ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் ராகு காலத்திற்கு முன் முக்கிய பணிகளை முடிப்பது நல்லது. மதியத்திற்குப் பிறகு மன உளைச்சல் அதிகரிக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் மனக்கசப்புகள் நிகழக் கூடும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்பது அவசியம்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எந்த முடிவையும் எடுக்கும் முன் இருமுறை யோசிப்பது அவசியம். இன்று அபிஜித் முகூர்த்தம் இல்லை என்பதால், முக்கிய பணிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பம், பயம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். எடுக்கும் காரியங்களில் தடைகள் உண்டாகலாம். வாகனப் பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று தூக்கமின்மையை உணரலாம். அதிக வேலையால் மன, உடல் சோர்வு ஏற்படும். ராகு காலத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டாம். இது உங்கள் ஆளுமையை பாதிக்கக்கூடும். உங்கள் கோபமான நடவடிக்கை காரணமாக வீட்டில் அமைதி குலையலாம். பணவரவில் தாமதம் ஏற்படலாம். பண பண பரிவர்த்தனைகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

55
மகரம்

இன்றைய தினம் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். தொழில், தனிப்பட்ட உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மதியம் 12:35 முதல் 1:57 வரை ஆபத்தான நிதி முடிவுகளைத் தவிர்க்கவும். அதிகண்ட யோகத்தின் தாக்கம் தொழில் அல்லது பணியிடத்தில் எதிரொலிக்கலாம். மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது பணியிடத்தில் அதிக அழுத்தம் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போகலாம். எனவே பொறுமையை இழக்காமல் பணிகளை செய்து முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories