நவ கிரகங்களில் புதன் கிரகமானது பேச்சு, அறிவு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தீபாவளிக்குப் பிறகு அக்டோபர் 24 ஆம் தேதி புதன் கிரகம் விருச்சிக ராசிக்கு உள் நுழைகிறார். விருச்சிக ராசியானது செவ்வாய் பகவனால் ஆளப்படும் ராசியாகும். செவ்வாயின் சொந்த ராசிக்குள் புதன் நுழைவது மூன்று ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. விருச்சிக ராசியில் புதனின் சஞ்சாரம் வணிகம், தொழில், காதல், நிதி, கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.