Astrology: சூரியனை சந்திக்கும் எமன்.! நவராத்திரி முதல் நாளில் நடக்கும் அதிசயம்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்!

Published : Sep 21, 2025, 10:56 AM IST

Navapancha Raja Yoga : நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பு வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
சூரியன்-எமன் சந்திப்பு

இந்து மதத்தில் அம்பிகையின் 9 வடிவங்களை கொண்டாடும் சிறப்பு வாய்ந்த பண்டிகை தான் நவராத்திரி. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நவராத்திரி காலத்தில் பல சிறப்பான யோகங்கள் உருவாகி மக்களுக்கு பல நன்மைகளை அளிக்க உள்ளது. கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இவர் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி மகர ராசியில் இருக்கும் எமனுடன் (ப்ளூட்டோ) இணைந்து சக்தி வாய்ந்த நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார்.

25
நவபஞ்ச ராஜயோகம்

வேத ஜோதிடத்தின்படி சூரியன் தற்போது கன்னி ராசியின் லக்னத்திலும், மகர ராசியின் ஒன்பதாவது வீட்டிலும் இருக்கிறார். எமன் மகர ராசியில் இருக்கும் பொழுது, கன்னி ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கிறார். இவ்வாறு கிரகங்கள் ஒன்றாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடுகளில் இருந்தால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகும். இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

35
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் பல நன்மைகளை வழங்க உள்ளது. இந்த யோகத்தால் வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பல சவால்கள் நீங்கக் கூடும். மாணவர்கள் தேர்வில் பல வெற்றிகளை ஈட்டலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றிகள் சாத்தியமாகும். உயர் கல்வியை தொடர வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு நினவாகலாம். 

இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. வணிகத்திலும் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக இந்த யோகம் உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அனைத்து துறைகளிலும் நன்மையை வழங்கும். தனுசு ராசியின் பத்தாவது வீட்டில் சூரியன் இருக்கிறார். பத்தாவது வீடானது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது தொழில், வேலை, சமூக அந்தஸ்து, நற்பெயர், அதிகாரம் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே தனுசு ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த துறைகளில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 

வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய உத்திகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை வலுவடையும். தொழில் போட்டியாளர்களைப் பின்னுக்கு தள்ளி முன்னேறிச் செல்வீர்கள். வசதிகள், ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பொன், பொருள், நகை, வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டு.

55
கன்னி

கன்னி ராசியின் லக்ன வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க இருக்கிறீர்கள். உங்களுக்கு குறுகிய காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் நீங்கள் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் நிதி நிலைமை எதிர்பாராத அளவு ஸ்திரத்தன்மை அடையும். எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories