Astrology : புதன் கிரகம் கடக ராசிக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே அங்கு குரு மற்றும் சுக்கிரன் இருக்க, இந்த மூன்று கிரகங்களின் அரிய சேர்க்கை பல மாற்றங்களை கொண்டு வர உள்ளது. குறிப்பாக 5 ராசிக்காரர்களின் வாழ்வில் அற்புதங்கள் நடக்கப் போகிறது.
சிம்ம ராசிக்காரர்களின் முழு கவனமும் பணம் சம்பாதிப்பதில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியுடன் வெற்றி காண்பார்கள். சுக்கிரன் அருளால், பணவரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் இப்போது முடியும்.
25
துலாம் ராசி
இந்த கிரக சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. வருமானத்தை பெருக்க புதிய வழிகள் பிறக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உடல்நலப் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். கடந்த கால பணப் பிரச்சனைகள் தீரும்.
35
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை சாதகமான பலன்களைத் தரும். சுக்கிரனின் அருளால் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும்.
ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையை இந்த கிரக சேர்க்கை பொற்காலமாக மாற்றும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் தீரும். எல்லா விஷயங்களிலும் உங்கள் துணை உறுதுணையாக இருப்பார். இது உங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
கடக ராசிக்காரர்களுக்கும் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை சாதகமாகவே உள்ளது. கடந்த கால கஷ்டங்கள் அனைத்தும் விலகும். வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம்.