ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டது. இவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனை நாம் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த வகையில், வரும் ஜூலை மாதம் மிக முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான சுக்கிரன், புத்தி கூர்மை மற்றும் வணிகத்தின் காரகனான புதன், கிரகங்களின் அரசனான சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் தங்களின் ராசி நிலையை மாற்றுகின்றன. இவர்களுடன் சேர்ந்து, மிக மெதுவாக நகரும் சனி பகவானும் தனது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். இந்த மகா கிரக மாற்றங்களால், ஜூலை மாதத்தில் இந்த 4 ராசிகாரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.