FIFA World Cup 2022: 120 நிமிடம் ஆடி டையில் முடிந்த போட்டி! பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தி குரோஷியா

By karthikeyan VFirst Published Dec 5, 2022, 11:24 PM IST
Highlights

ஃபிஃபா  கால்பந்து உலக கோப்பையில் ஜப்பான் - குரோஷியா இடையேயான போட்டி டையில் முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்னும் 4 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. அந்த 4 போட்டிகளிலிருந்து 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதியில் அர்ஜெண்டினா - நெதர்லாந்து அணிகளும், இங்கிலாந்து - ஃபிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன.

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இன்றைய போட்டியில் ஜப்பான் - குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டியின் 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைஸன் மேடா  கோல் அடித்தார். 55வது நிமிடத்தில் இவான் பெரிசிக் கோல் அடிக்க, அதன்பின்னர் இரு அணிகளும் கடுமையாக போராடியும் ஆட்டம் முடியும் வரை இருஅணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.  அதனால் மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மொத்தமாக 120 நிமிடம் ஆட்டம் முடிந்த பின், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

FIFA World Cup 2022: ஃபிரான்ஸ் - போலந்து நாக் அவுட் போட்டி முடிவு..! மிக துல்லியமாக கணித்த ஃபிரான்ஸ் அதிபர்

இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில் முதல் 4 வாய்ப்பில் ஜப்பான் ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க, குரோஷியா 3 கோல் அடித்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. தொடரை விட்டு வெளியேறியது ஜப்பான்.

click me!