திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தச்சன்புதூர் ரோடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் காலி வீட்டுமனைகள் உள்ளது. இங்கு இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தச்சன்புதூர் ரோடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் காலி வீட்டுமனைகள் உள்ளது. இங்கு இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
இதையும் படிங்க;- பல பெண்களை கரெக்ட் செய்து உல்லாசம்.. விஷயம் தெரிந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா?
அப்போது, அங்கு உயிரிழந்து கிடந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். அவரது உடலில் காயங்கள் நகக்கீறல்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கட்டாய்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இழுத்து சென்ற தடயங்களும் இருந்துள்ளது.
இதையும் படிங்க;- 25 நாட்களில் கசந்து போன திருமண வாழ்க்கை.. கணவனை போட்டு தள்ள கூலிப்படையை ஏவிய மனைவி.. இறுதியில் நடந்தது என்ன?
இதையும் படிங்க;- கண்டவன்கிட்ட கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலி.. 45 வயது ஆண்டியால் 28 வயது இளைஞர் செய்த காரியம்..!
இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வகின்றனர். இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .