நண்பனின் மனைவி குளிக்கும்போது ரசித்து ரசித்து வீடியோ எடுத்த வாலிபர்... கணவன் இல்லாத நேரத்தில் காம சேட்டை!!

By sathish kFirst Published Jul 20, 2019, 12:17 PM IST
Highlights

கடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் நண்பனின் மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்து செக்ஸ் டார்ச்சர்  கொடுத்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் நண்பனின் மனைவி குளிக்கும்போதுவீடியோ எடுத்து செக்ஸ் டார்ச்சர்  கொடுத்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஆவலப்பம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம்  மனைவி ரஞ்சிதா. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் சுப்பிரமணியத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இதனால் மணிகண்டன் அடிக்கடி சுப்பிரமணியம் வீட்டிக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது, ஒருநாள் திடீரென சுப்பிரமணியம் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்ற மணிகண்டன் ரஞ்சிதா குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார் மேலும் ரஞ்சிதா மீது கில்மா ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

மணிகண்டன் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் விஷயத்தை தனது கணவனிடம் சொல்லியுள்ளார் ரஞ்சிதா, இதனால்  இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த 16 - ந் தேதி சுப்பிரமணியம் வேலைக்கு சென்றவுடன் அவரது வீட்டிற்கு மணிகண்டன் சென்று பார்த்துள்ளார்.அப்போது அங்கிருந்த ரஞ்சிதாவிடம் நீ குளிக்கும் போதும், சேலை மாற்றும் போதும் எடுத்த ஆபாச படங்களை வைத்து உள்ளேன். நீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இவற்றை அனைவரிடமும் காட்டி உன்மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் ரஞ்சிதாவின் சேலையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றுள்ளார். எதற்கு பயப்படாத ரஞ்சிதா அதற்கு இடம் கொடுக்கவில்லை. இது குறித்து அவர் மணிகண்டனின் மனைவி சந்தியாவிடம் கூறி உள்ளார். ஆனாலும் அவர் கணவரை கண்டிக்கவில்லை. அவருக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார்.

மணிகண்டன் செய்ததை  தனது கணவர் சுப்பிரமணியத்திடம் கூறி அழுதுள்ளார் ரஞ்சிதா. பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கணவனின் செக்ஸ் ஆசைக்கு உடந்தையாக இருந்த மணிகண்டன் மனைவி சந்தியாவை போலீசார் வலை தேடி வருகிறார்கள்.

click me!