ஜூனியர் மாணவர்களை கொடுமைப்படுத்திய சீனியர்ஸ் - அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம்

By Raghupati RFirst Published Nov 16, 2022, 3:48 PM IST
Highlights

மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு, எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களை, முகமூடி அணிந்து கொண்டு வந்த மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 7 பேர், மாடியில் தள்ளி, கதவை சாத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மறுநாளே ஒரு மாணவனின் பெற்றோர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, மற்ற மாணவர்களும் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், இதில் தொடர்புடைய 7 எம்பிபிஎஸ் மாணவர்களை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !

click me!