படுக்கை அறையில் கள்ள காதலனுடன் கட்டிப் புரண்ட தாய்.. நேரில் பார்த்த மகன், பூட்டிய அறையில் எடுத்த பயங்கர முடிவு

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2022, 6:43 PM IST
Highlights

கள்ளக் காதலனை வீட்டுக்கே வரவழைத்து தாய் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை நேரில் பார்த்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இக்கொடூரம் நடந்துள்ளது. 
 

கள்ளக் காதலனை வீட்டுக்கே வரவழைத்து தாய் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை நேரில் பார்த்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இக்கொடூரம் நடந்துள்ளது. 

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசிரியர் பெற்றோர்கள்தான், ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் அவரவர் பெற்றோர்களின் நடத்தையை பொறுத்தே உள்ளது. அனைத்து விஷயங்களிலும் பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளனர். அப்படிப்பட்ட பெற்றோர் வழி தவறி நடக்கும் போது அத்தவறுகள் குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு தாய் தவறு செய்யும்போது அது அவர்களது குழந்தையை நேரடியாக பாதிக்கிறது, எனவே தாய் ஒரு தவறு செய்தார் என்று கூறினால் கூட அதை குழந்தைகள் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்: “ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

அதே ஒரு மகன் தன் தாயை பார்க்கக் கூடாத ஒருநிலையில் பார்க்கும் போது அது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. இதனால் அவர்கள் கொலை, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளையும் எடுக்க நேரிடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  ஆந்திர மாநிலம் ஏலுர் மாவட்டம் பீமடோலுவை சேர்ந்தவர் வெங்கட்,  இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார், அவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார், இதனால் தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறார்,

இதையும் படியுங்கள்: ஒரு பெண்ணுக்கு இரண்டு வாலிபர்கள் போட்டாபோட்டி... இறுதியில் நடந்த பயங்கரம்..!

வெங்கட் கொத்தனார் வேலை செய்து தாயை கவனித்து வந்தார், ஆனால் அவரின் தாய் சில ஆண்டுகளாக ஒரு நபருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வருவந்தார். தனது தாயின் நடத்தை வெங்கட்டுக்கு தெரியவந்தது, இனி இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என வெங்கட் பலமுறை எச்சரித்து வந்தார், ஆனால் அவரது தாய் கேட்கவில்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் வெங்கட் கொத்தனார் வேலையை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பினார், அப்போது தாய் கள்ளக்காதலனுக்கு போன் செய்து வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வந்தவெங்கட் அதை நேருக்கு நேர் பார்த்து விட்டார், இதனால் ஆத்திரத்தில் தாயிடம் தகராறில் ஈடுபட்டார், தாங்கமுடியாத வெங்கட் அதிக அளவில் மது அருந்தினார், பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தனது மனைவியை கூட்டி கொண்டு அதில் தனது தாயின் சேலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், பிற்பகல் வீட்டுக்குள் சென்ற வெங்கட் வெளியில்  வரவில்லை என்பதால் அவரது நண்பர் ஆனந்த் வந்து  கதவைத் தட்டினார்.

ஆனால் கதவு திறக்கவில்லை, எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கட் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வெங்கட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 

click me!