காதலியை பார்க்க சென்ற விஜய்.. அடித்து கொன்ற அஜித் - திண்டுக்கல்லை அதிர வைத்த சம்பவம்.!

Published : Jul 13, 2022, 06:56 PM IST
காதலியை பார்க்க சென்ற விஜய்.. அடித்து கொன்ற அஜித் - திண்டுக்கல்லை அதிர வைத்த சம்பவம்.!

சுருக்கம்

திண்டுக்கல் அருகே காதலியை பார்க்க சென்ற காதலனை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் அணை அருகே முட்புதரில் மர்ம சாக்குப்பை ஒன்று கிடந்தது. மர்மமான  அந்த சாக்குப்பையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த இடத்துக்கு வந்த போலீசார் பையை திறந்து பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் உடல் இருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் அழகுவிஜய்  கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜித்குமார் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். அஜித்குமாரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

அப்போது அவருக்கும், அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களிடையே நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஒரு கட்டத்தில் தங்கையின் காதலை அறிந்த அஜித்குமார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  தனது செல்போனில் தனது காதலன் அழகு விஜய்க்கு தொடர்பு கொண்டு பேசினார். தான் தனியாக இருப்பதாகவும், வீட்டிற்கு சந்திக்க வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அழகுவிஜய், தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் தனியாக பேசி கொண்டிருந்தனர். 

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

இதற்கிடையே அஜித்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது அஜித்குமார் தனது தங்கையை வீட்டின் ஒரு அறையில் தனியாக அடைத்து வைத்து, விஜயை கட்டையால் தாக்க சம்பவ இடத்தில் இறந்தார் விஜய். பிறகு விஜயின் உடலை கிராமத்துக்கு வெளியே உள்ள புதரில் வீசியுள்ளனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்