பாலியல் புகாரா சொல்றீங்க..? ஒவ்வொன்னுக்கும் வீடியோ வைச்சிருக்கேன்... அதிர்ச்சி தரும் நித்யானந்தா..!

By Thiraviaraj RMFirst Published Dec 24, 2019, 5:43 PM IST
Highlights

பாலியல் பலாத்கார வழக்கில் தான் ஏற்கனவே கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்தவற்றை காமெடியாக விவரித்த நித்யானந்தா, தன்னை கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர்.
 

2002ம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளதால் தம்மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் எனக் கூறிய நித்யானந்தா, 2002க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என புகார் கொடுங்கள் என வேடிக்கையாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

பாலியல் புகார், சிறுமிகளை கடத்தியது என பல்வேறு புகார்களில் போலீசார் ஒருபுறம் தேடிவந்தாலும், தினமும் சமூக வலைதளத்தில் தனது சத்சங்கத்தை நித்யானந்தா நிகழ்த்தி வருகிறார். பஞ்ச் வசனம், சாடல், சாபம் என சத்சங்கம் நிகழ்ச்சியை காமெடி கலாட்டாவாக நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தும் நித்யானந்தா, நேற்றும் அதே பாணியில் தனது உரையை நிகழ்த்தினார். ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும் என தமது பாணியில் அவர் விளக்கம் அளித்தார்.

பல விஷயங்களில் ஜெயித்த போராளி தான் என்றும் நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும் என தனது சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். நித்தியடி என்றால் என்ன என்பதையும் அதிரடியாக விளக்கினார்.


 

click me!