பக்குவமா பேசி பக்கத்துல உட்கார்ந்து மருத்துவ மாணவியிடம் சில்மிஷம்!கண்டக்டர் எந்த இடத்தில் கை வைத்தார் தெரியுமா

By vinoth kumarFirst Published Aug 15, 2022, 1:45 PM IST
Highlights

ஓடும்பேருந்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

ஓடும்பேருந்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். 3 நாட்கள் விடுமுறை என்பதால் சிப்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு வர நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துக்காக காத்திருந்தார்.  அப்போதுது தஞ்சாவூரில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பேருந்தில் அவர் ஏறினார். பேருந்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதையும் படிங்க;- மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

பேருந்து வேலூரை நெருங்கிய நேரத்தில் நடத்துனர்  நீலமேகம்(46) மாணவி இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர், மாணவியிடம் சில்மிஷத்தில் இடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரை எச்சரித்தார். இதற்கிடையில் பேருந்து வேலூர் வந்ததும் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 

இதையும் படிங்க;- பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆத்திரம்.. பட்டியலின சிறுவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்..!

click me!