வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப்படுகொலை.. சிதறிக் கிடந்த ரத்தம்.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்

By vinoth kumarFirst Published Jun 30, 2022, 12:25 PM IST
Highlights

பெற்றோர் பழனி கோவிலுக்கு சென்ற நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் பழனி கோவிலுக்கு சென்ற நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரில் பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவரது மகன் பாலசுப்பிரமணியம்(31). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த செந்தில் 3 ஆண்டுகளான பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க;- வாயில் சரக்கை ஊற்றி நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..!

இந்நிலையில், பெற்றோர் பழனி கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்பிரமணியம் வீட்டில் ததனியாக இருந்துள்ளார். இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில்  சடலமாக கிடந்தார்.

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

பெற்ற மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறினர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்பிரமணியம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!