தமிழகத்தில் மத்தியில் இருக்கும் திருச்சியில் ஹைடெக் முறையில் விபசாரம் களைகட்டி உள்ளது. வாட்ஸ் அப்பில் செலக்ட் பண்ணால் போதும் வெளிமாநில அழகிகள் ரூம் தேடி அனுப்பி வைப்பார்களாம்.
தமிழகத்தில் விபசார தடுப்பு காவல் பிரிவு செயல்படுகிறது. விபசாரத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது தான் இந்த பிரிவின் செயல்பாடு. ஆனாலும் முக்கிய நகரங்களில் விபசாரம் தொழில் நுட்ப வசதியை வைத்து இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் போலீசார் அதனையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து தான் வருகிறார்கள். விபசார வழக்குகளில் கைது செய்யப்படும் இளம்பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.
பின்னர், அவர்களை யாரேனும் ஜாமீனில் வெளியே அழைத்து சென்று விடுகின்றனர். வெளியே சென்ற பெண்கள் மீண்டும் திருந்தி தங்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்தோடு வாழ நினைத்தாலும் அவர்களை திருந்த விடுவதில்லை. இதனால் மீண்டும் அதே தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு காசு பார்க்கும் கும்பல் அதிகரித்துள்ளது.
அதிநவீன செல்போன் புழக்கத்தில் கடந்த களங்களில் இல்லாத காலங்களில் இல்லாத அளவிற்கு தற்போது வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது விபச்சாரம். கடந்த காலங்களில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் விபசாரம் கொடி கட்டி பறந்தது. பின், கால மாற்றத்திற்கேற்ப வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் அடுத்து கட்டத்திற்கு முன்னேறியது. ஆடம்பர பங்களாக்களை வாடகைக்கு எடுத்து அதில் வெளிமாநில அழகிகளை கொண்டு வந்து விபசார தொழில் நடந்து வந்தது.
இதில் ஒரு சில நேரங்களில் அந்த பகுதிகளில் அறிமுகம் இல்லாத ஆண்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்து சிக்க வைத்து வருகின்றனர். ஒருசில இடங்களில் ஆம்னி காரில் இளம்பெண்களை கொண்டு ஹைடெக் முறையில் விபச்சாரம் நடந்து வருகிறது. ஆனாலும் கால மாற்றத்தில் இதுபோன்றவைகள் அதிகம் நடை முறைப் படுத்தப் படுவதில்லை. தற்போது திருச்சியில் ஹைடெக் முறையில் இளம்பெண்களை கொண்டு விபசாரம் அரங்கேறி வந்தது.
இந்நிலையில், திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் அரங்கேறி வருகிறது. இளம்பெண்களை முதலில் மாடர்ன் உடை அணிய வைத்து அதனை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதில் அழகிகளுக்கு உயரம், கலர், சில முக்கிய ****** விவரங்களோடு போட்டோக்கள் அனுப்புவார்களாம். செலக்ட் பண்ணால் போதும், அப்பாயின்மென்ட் நேரம் ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம், 6 மணி நேரம், அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை உள்ளது. நேரத்திற்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
படங்களில் உள்ள அழகிகளை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்படும் ஆண்கள் அங்கு சென்று, அதற்கான கட்டணத்தை செலுத்தி உல்லாசம் அனுபவிக்கின்றனர். இதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 2000. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறைஅழகிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் புதிய அழகிகள் கிடைக்காவிட்டால் உடைகளை மாற்றி அழகிகளை வித்தியாசப்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றி அனுப்புவதும் நடக்கிறதாம்.
இப்படி ஏமாந்த வாடிக்கையாளர்கள் சிகிச்சை முடிந்து திரும்பும்போது ஏமாற்றத்தை வெளியே சொல்வது இல்லை. அடுத்த முறை பெங்களூரு பார்ட்டி வருது. பிரஷ் பீஸ் நீங்கள் தான் பஸ்ட், என தேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இப்படி தொய்வின்றி கஸ்டமர்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். இதுகுறி த்து காவல்துறை நடவடிக்கை எடுத்து இளம் சமுதாயத்தினரை காப்பாற்ற வேண்டும் என பல தளரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறதாம்.