கல்லூரி பேராசிரியையை நிர்வாணமாக படம் பிடித்த மாணவர்...!! உல்லாசத்துக்கு அழைத்து நச்சரிப்பு... நையப்புடைந்தது போலீஸ்...!!

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 1:06 PM IST
Highlights

எவ்வளவு போராடியும் பேராசிரியை உள்ளாசத்திற்கு சம்மதிக்காததால் அவரை சமாதானம் செய்து சோழிங்கநல்லூரில் அழைத்து வந்து அவரது அறையில் இறக்கி விட்டு சென்றார் அந்த மாணவர்.

மாமல்லபுரத்தை அடுத்த புஞ்சேரியில் கல்லூரி பேராசிரியையின் நிர்வாணமாக படம் படித்து  உல்லாசத்துக்கு அழைத்து டார்ச்சர் செய்த மாணவரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சோழிங்கநல்லூரில் தங்கி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவேஷ் (23) என்ற மாணவரும்,  சென்னை அம்பத்தூரில் தங்கி அதே பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். பேரிசிரியையும் மாணவர் விவேஷ்சும்  ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, நண்டபர்களாக பழகி வந்தனர்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விவேஷ் தனது பிறந்தநாள் கொண்டாடினார், அப்போது பேராசிரியை என்ன கிப்ன் வேண்டும் என்று  விவேஷ் இடம் கேட்டார், மாணவர் விவேஷ் கிப்ட் எதுவும் வேண்டாம்.. ஈசிஆர் சாலையில் தன்னுடன் பைக்கில் அமந்து வந்தால் போதும் என்று போராசிரியையிடம் கோரினார். தம் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிற்றே என்பதாலும், தம்மை விட வயதில் இளையவர் என்பதாலும் விவேஷ்வுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டார்  பேராசிரியை

 

இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை மானவர் விவேஷ் சோழிங்கநல்லூர் சென்று அந்த உதவி பேராசிரியேயின் அறைக்குச் சென்று  தனது பைக்கில் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றார். மாமல்ல புரத்தில் பல இடங்களில் சுற்றினர். பின்னர் மாலை இருட்டும் நேர்த்தில் கிழக்கு கடற்கரைச் சாலை பூஞ்சேரி பகுதி அருகே சென்ற போது ஒரு மறைவான இடத்தில் நிறுத்தி அந்தப் பேராசிரியர் இடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார் மாணவர் விவேஷ். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை தன்னை விட்டுவிடும்படி கொஞ்சினார், இன்று வேண்டாம் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று கதறினார் ஆனாலும் விவேஷ் பேராசிரியையின் விடவில்லை.

அடைகளை களைந்து  அவரை நிர்வாணமாக  செல்போனில் வெளிச்சத்தில் பிடம்பிடித்தார். எவ்வளவு போராடியும் பேராசிரியை உள்ளாசத்திற்கு சம்மதிக்காததால் அவரை சமாதானம் செய்து சோழிங்கநல்லூரில் அழைத்து வந்து அவரது அறையில் இறக்கி விட்டு சென்றார் விவேஷ். பின்னர் அவர் செல்போனில் எடுத்து வைத்துள்ள படத்தை காட்டி  தன் ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி பேராசிரியையை மிரட்டிவந்துள்ளார் மாணவர் விவேஷ். இதையடுத்து மாணவரால் தனக்கு நேர்தவைகள் குறித்து பேராசிரியர் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் . இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விவேஷை  கைது சிறையில் அடைந்தனர். 
 

click me!