மனைவிக்கு நிர்வாண பூஜை செய்ய சொன்ன கணவன்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

By Raghupati RFirst Published Oct 23, 2022, 10:16 PM IST
Highlights

மனைவிக்கு நிர்வாண பூஜை செய்த சம்பவம் ஒன்று கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (வயது 36) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டு சத்யபாபு குடும்பத்தினர், திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகளை அழைத்துள்ளனர்.

அவர்களும் வந்து வீட்டை சோதித்து பார்க்க. அப்போது சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருப்பதாகவும், அதனை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மாமியார் ஷைலஜா மற்றும் கணவருக்கு நோய் இருப்பதாகவும், அதனை குணப்படுத்த வீட்டிலுள்ள மருமகள் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

மேலும் பெண்ணின் ஆடைகளையும் கழட்ட முயன்றனர். இதனால் பதறிப்போன அந்த பெண், இருவரையும் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் தனது குடும்பத்தின் உதவியோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார் இந்த பெண்.

இருப்பினும் பல ஆண்டுகளாக அந்த பெண் தனது கணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்நிலையத்திற்கும் வீட்டிற்கும் அழைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தினால், மீண்டும் அந்த பெண் தனது புகார் குறித்து குரலெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க..காதலிக்க மாட்டியா, அப்போ இதுதான் உன் கதி.! கேரளாவை அதிர வைத்த பரபரப்பு சம்பவம்

இதையடுத்து சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் ஷைலஜா மீது வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்துள்ளனர். ஆனால் இந்த தகவல் கிடைத்ததையடுத்து கணவர் சத்யபாபு மற்றும் மந்திரவாதிகளை தலைமறைவாகியுள்ளதால், போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

click me!