“என்னை விட்டுடுங்க அங்கிள்..” 12ம் வகுப்பு மனைவியை கற்பழித்த தந்தையின் நண்பர்கள் !

By Raghupati RFirst Published Aug 17, 2022, 8:13 PM IST
Highlights

கேரளாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர், புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் சில நாட்களாக வகுப்பில் சோகமாக அமர்ந்து இருந்தார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த ஆசிரியை, அந்த மாணவியிடம் என்ன ஆச்சு ? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, உடல்நல குறைவு என்று கூற மாணவியை மருத்துவரிடம் அழைத்து கொண்டு போய் உள்ளார். 

மாணவியை பரிசோதித்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே ஆசிரியை குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..“முதல்வரின் வளர்ப்பு.. நான் ஏமாறமாட்டேன் ” ராஜினாமா கூட! எமோஷனல் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்

இதற்காக அவரை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் மலப்புரம் கோர்ட்டில் மனு செய்தார். இதற்காக அவர் அடிக்கடி மலப்புரம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது இருந்தது. அப்போது கணவரின் நண்பர்கள் மூன்று பேரிடம், வீட்டில் தனியாக இருக்கும் மகளை கவனித்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மூன்று பேரும், மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வெளியே கூறினால், கொன்று விடுவதாக மிரட்டி அடிக்கடி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில்தான் மாணவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

அவர்கள் இதுபற்றி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் தந்தையின் நண்பர் ஷாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்

click me!