பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்.. நடுரோட்டில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக வீட்டுக்கு விரட்டிவிட்ட கொடூரம்.!

By vinoth kumarFirst Published Sep 23, 2022, 11:17 AM IST
Highlights

இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் வாயை பொத்தி ஒதுக்குப்புறமாக தூக்கிச்சென்று ஆடைகளை கழற்றி சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

15 வயது சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டம் போஜ்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணிக்கு சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் வாயை பொத்தி ஒதுக்குப்புறமாக தூக்கிச்சென்று ஆடைகளை கழற்றி சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

 பின்னர், அந்த சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்குச் செல்லும்படி அவர்கள் விரட்டிய நிலையில், செய்வதறியாமல் திகைத்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து நிதின், கபில், அஜய், இம்ரான், நவ்ஷே அலி என்ற 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சாலையில் ஆடைகளின்றி சிறுமி நடந்து  செல்லும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

click me!