அய்யய்யோ என்ன காப்பாத்துங்க.. சினிமா பாணியில் இறைச்சி வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை..!

By vinoth kumarFirst Published Dec 30, 2022, 2:09 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நகரை சேர்ந்தவர் கலையரசன் (40). இவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் இருந்து கலையரசன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.

இறைச்சி வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நகரை சேர்ந்தவர் கலையரசன் (40). இவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் இருந்து கலையரசன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.  அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- என்ன லவ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா.. உல்லாசத்துக்கு மறுத்த காதலி.. கதறவிட்ட காதலன்..!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;-  மிளகாய் பொடி தூவி இளைஞர் கொடூர கொலை.. ஆத்திரம் தீராததால் தலையை துண்டித்த பயங்கரம்..!

click me!