பெற்ற மகளை தந்தையே கொலை செய்த அவலம்... அதிர்ச்சி தரும் கொலையின் பின்னணி!!

By Narendran SFirst Published Oct 6, 2022, 6:01 PM IST
Highlights

மதுரையில் பெற்ற மகளை கொலைசெய்து வீட்டின் பரணியில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மதுரையில் பெற்ற மகளை கொலைசெய்து வீட்டின் பரணியில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீஸார், வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 8 வயது சிறுமி தன்ஷிகாவின் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம்.. தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து போட்டுதள்ளிய மனைவி

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் உடலை  பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், காளிமுத்துவை தேடி வந்தனர். மேலும் இதுக்குறித்த விசாரணையில், கடந்த சில வருடமாக காளிமுத்துவுக்கும் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காளிமுத்து பிரியதர்ஷினியுடன்  அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் கண்டுப்பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதையும் படிங்க: குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை

பிரியதர்ஷினியிடம் காளிமுத்துவிற்கு ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமி நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதால் வீட்டின் அடுப்பங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பரணி மேல் வைத்த காளிமுத்து வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் பின்பு பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காளிமுத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை கொலைசெய்து பரணியில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!