உல்லாசத்தின் போது வளைச்சு வளைச்சு ஆபாச படம் எடுத்து ஓயாத டார்ச்சர்.. வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

By vinoth kumarFirst Published May 15, 2022, 8:09 AM IST
Highlights

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. திருமண ஆசை காட்டி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது சில  புகைப்படங்களை ஜெயக்குமார் எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. பின்னர்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, ஜெயக்குமாருடன் பழக்கத்தை நிறுத்திய அந்த  இளம்பெண், திருப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  பணியாற்றியுள்ளார்.

கணவரை இழந்த இளம்பெண்ணை மிரட்டி  ஆபாச படமெடுத்து திருமணம் செய்ய மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு  கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 10 மாதத்தில்  அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், அந்த பெண் அங்குள்ள ஒரு  துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது இந்த கடைக்கு அருகிலுள்ள காய்கறி  மொத்த விற்பனையகத்தில் பணியாற்றும் ஊழியரான வடமங்கலம் பூஞ்சோலை  குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் ஜெயக்குமார் (24) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. திருமண ஆசை காட்டி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது சில  புகைப்படங்களை ஜெயக்குமார் எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. பின்னர்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, ஜெயக்குமாருடன் பழக்கத்தை நிறுத்திய அந்த  இளம்பெண், திருப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  பணியாற்றியுள்ளார்.

 பின்னர் வேறு ஒரு நபரை திருமணம் செய்வதற்கான  ஏற்பாடுகளை இப்பெண் மேற்கொண்ட நிலையில் தகவல் கிடைத்ததும் மாஜி காதலனான  ஜெயக்குமார் அவரை செல்போனில் அவ்வப்போது தொடர்பு கொண்டு திருமணம் செய்து  கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மறுக்கவே, விரக்தியடைந்த  ஜெயக்குமார், ஏற்கனவே அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  அனுப்பி வைத்ததோடு தனது விருப்பத்தை நிறைவேற்றாவிடில் இவற்றை பேஸ்புக்,  டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என  மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்  உடனே வில்லியனூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  ஜெயக்குமாரை கைது  செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமோ.. கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்த அதிர்ச்சி

இதையும் படிங்க;- புகார் கொடுக்க சென்ற 25 வயது பழங்குடியின பெண்ணை புரட்டி எடுத்து நாசம் செய்த 59 வயது எஸ்.ஐ..!

 

click me!