சொந்த மனைவியுடன் உடலுறவு கொண்டதை படம் பிடித்த கணவன் … ரூ 10 லட்சம் கேட்டு மிரட்டல் !!

By Selvanayagam PFirst Published Jul 25, 2019, 9:56 AM IST
Highlights

ஆரணி அருகே தனது மனைவியுடன் தாம்பத்ய உறவு கொண்டதை படம் பிடித்து  10 லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால் வீடியோ வெளியிடப்போவதாக மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பெண் டாக்டர் ஆராதனா.  இவர் ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் டாக்டராக  பணியாற்றி வந்தார். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் தூர்கா நகரை சேர்ந்த சத்தியநாராயணா  என்ற  என்ஜினீயருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. இருவரும் சத்தியநாராயணன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சத்தியநாராயணா தனது மனைவியான பெண் டாக்டருடன் உடலுறவு கொண்டதை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவர் இல்லாத நேரத்தில் அதை பார்த்து ரசித்து வந்துள்ளார்.

இதனை ஒருநாள் பெண் டாக்டர் ஆராதனா பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த வீடியோவை செல்போனில் இருந்து அழிக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா பெண் டாக்டரை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து அவர்கள் சத்திய நாராயணாவிடம் நடந்தவற்றை மறந்து தனது மகளிடம் தகராறு செய்யாமல் குடும்பம் நடத்து இல்லை என்றால் திருமணத்தின் போது வரதட்சனையாக கொடுத்த 75 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் கொடு என  கேட்டுள்ளனர்.

அதற்கு சத்தியநாராயணா எதையும் திருப்பி தர முடியாது மேற்கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் உனது மகளுடன் குடும்பம் நடத்துவேன் இல்லையென்றால் அவளது ஆபாச படத்தை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துத்துள்ளார்.

இதுகுறித்து பெண் டாக்டர்  ஆராதனா ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியநாராயணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

click me!