மனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 8:16 AM IST
Highlights

அதன்பிறகு முத்து அவரது உறவினர்களுடன் வந்து இரவு நேரங்களில் பெண் பிள்ளையை கைக்குழந்தை என்றும் பாராமல் அடித்து வெளியே தள்ளிவிட்டு கதவை தாழிட்டு உள்ளார்.

தனது ஆபாச படங்களை  இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி தனது பணம், நகையை கணவர் பறிப்பதாகவும், வேறு ஒரு பெண்ணிடம் கள்ள உறவில் இருந்து வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்தவர் திவ்யா. சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் தனக்கும் தனது உறவினர் முத்து என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 200 சவரன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து தனக்கு சொந்தமான எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோம். தற்போது தனக்கு 9 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 

திருமணம் நடந்து ஒரு சில நாட்களில் கணவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே தாய் வீட்டில் இருந்து பணம் பெற்று வர அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாகவும், அண்ணன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டதாகவும், அதற்கு பணம் தரவேண்டும் நகையை அடகு வைக்க வேண்டும் எனக்கூறி பலமுறை முத்து சண்டையிட்டு வந்தார், மேலும் தொழில் ஒன்று தொடங்க உள்ளதாக நகைகளை  அடகு வைத்து பணம் தரும்படி கேட்டார். அதற்கு திவ்யா தனது நகைகளை அடகு வைத்து புதுப்பேட்டை பகுதியில் ராக் டிரேடர்ஸ் என்ற கார், இருசக்கர வாகனம் உதிரி பாகங்கள் விற்கும்  கடையை  தனது பெயரிலேயே தொடங்கியதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை கருவுற்ற போது கணவர் ஏஞ்சல் என்ற இவஞ்சலின் என்ற பெண்ணை வீட்டுக்கு வேலைக்காக அழைத்து வந்தார். திவ்யா பலமுறை எடுத்துக் கூறியும் கேட்காமல் இவர்கள் இருவரும் ஒரே அறையில் இருப்பதை கண்டு இருவரையும் அடித்து வெளியே தள்ளியுள்ளார். 

அதன்பிறகு முத்து அவரது உறவினர்களுடன் வந்து இரவு நேரங்களில் பெண் பிள்ளையை கைக்குழந்தை என்றும் பாராமல் அடித்து வெளியே தள்ளிவிட்டு கதவை தாழிட்டு உள்ளார். முதல் திருமணம் ஆகி இருந்த நிலையில் எவ்வித விவாகரத்தும் மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக ஏஞ்சலை 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார் முத்து. திவ்யாவின் பெயரையும் கடையின் வருமானத்தையும் எடுத்து ஏஞ்சலின் பெயருக்கு பயன்படுத்தியும், கந்து வட்டிக்கு விட்டு  விபச்சார தொழில் செய்து வருவதாகவும் திவ்யா புகார் அளித்துள்ளார்.

சொத்தையும் நகைகளையும் அபகரித்த கணவர் முத்து, முத்துவின் அண்ணன் செல்வம், முத்துவின் அம்மா ருக்மணி மற்றும் அவர் சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் ஏஞ்சல் உட்பட கூலிப்படை உதவியுடன் பலமுறை தன்னை இருசக்கர வாகனத்தில் வைத்து விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள். ஆகவே நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகைப்படங்கள், ஆடியோக்கள் உள்ளிட்ட அடங்கிய புகார் மனுவினை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ள ஏஞ்சல் என்ற பெண் விஜய் மக்கள் இயக்கத்தில் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வருவதாகவும் அதிமுக  கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒருவரை வைத்தும்  ஏஞ்சல் மிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். கணவர் முத்து தனக்கு தெரியாமல் தன்னை நிர்வாணமாக படம்பிடித்து வைத்துக் கொண்டு தற்போது அமை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தன்னை மிரட்டி வருவதாகவும் பணமும் நகையும் கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களை கட்டாயம் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். 
 

click me!