சிறுமியை சீரழித்துச் சிதைத்தவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் நிர்வாகத்தில் இருந்தவன்...! கிளம்பிய பூதம், கிறுகிறுக்கும் தோழர்கள்..!

By Vishnu PriyaFirst Published Apr 1, 2019, 2:33 PM IST
Highlights

பொள்ளாச்சி செக்ஸ் வீடியோஸ் விவகாரத்துக்கு அடுத்து தமிழகத்தை அதிர வைத்த விஷயமென்றால் அது கோயமுத்தூரில் ஏழு வயது சிறுமி பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி, கொல்லப்பட்ட விவகாரம்தான். இதில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் சந்தோஷ்குமாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாஜி நிர்வாகியாக சிலர் அடையாளப்படுத்திப் பேசுவதால் தெறித்து திகைக்கின்றனர். தோழர்கள்.

பொள்ளாச்சி செக்ஸ் வீடியோஸ் விவகாரத்துக்கு அடுத்து தமிழகத்தை அதிர வைத்த விஷயமென்றால் அது கோயமுத்தூரில் ஏழு வயது சிறுமி பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி, கொல்லப்பட்ட விவகாரம்தான். இதில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் சந்தோஷ்குமாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாஜி நிர்வாகியாக சிலர் அடையாளப்படுத்திப் பேசுவதால் தெறித்து திகைக்கின்றனர். தோழர்கள். 

சிறுமி தன் பாட்டி வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவளை தூக்கிச் சென்று அசிங்கம் செய்திருக்கிறான் சந்தோஷ்குமார். உலகமறியாத அந்த தளிர் வேதனையில் அலறியபோது, அதை மூர்க்கமாக தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். இந்த கொலை முடிந்த நிமிடங்களில் அவனது பாட்டியும் இறந்திருக்கிறார். பிரேதத்தை வீட்டில் மறைத்துவிட்டு,  பாட்டியின் ஈமச்சடங்குகளை முடித்தவன், அதன் பிறகு அதிகாலையில் சிறுமியின்  பிணத்தைக் கொண்டு போய் அவளது வீட்டின் எதிரிலேயே வீசிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறான். 

இப்போது போலீஸ் விசாரணையில் வகையாய் சிக்கி, சிறை சென்ற சந்தோஷ்குமாரை ‘ஒருவேளை சிறுமியை இவன் சீரழிப்பதை பார்த்து பாட்டி, திட்ட, அவரையும் இவன் தான் கொன்றிருப்பானோ?’ என்று தனி பீதியை கிளப்புகின்றனர் கஸ்தூரிநாயக்கன் புதூர் மக்கள். இந்நிலையில், கற்பனைக்கும் எட்டாத இந்த குரூரத்தை செய்த சந்தோஷ்குமாரைப் பற்றி பல தகவல்கள் தடதடக்கின்றன. கடந்த நான்கைந்து மாதங்களாக தனது பாட்டிவீட்டுக்கு வரும்போதெல்லாம் சாக்லேட் ஆசை காட்டி அந்த சிறுமியை இவன் சிறுக சிறுக சீரழித்துள்ளதாகவு, சம்பவத்தன்று மூர்க்கமாக நடந்து அந்த பிஞ்சு வலியில் அலறியதாலேயே கொலையை செய்துள்ளான். 

சிறுமிகளை சீரழிக்கும் கொடூரன்! சில வருடங்களுக்கு முன் திருமணமாகி, இவனது அசிங்கப்போக்கினாலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்கிறார்கள். இப்படியெல்லாம் சந்தோஷைப் பற்றி தகவல் தெளித்துக் கொண்டிருக்கையிலேயே...’சந்தோஷ்குமார், தன் சொந்த ஊரான உலியம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஜி வார்டு செயலாளராக இருந்தவன்’ எனும் ஒரு தகவலை ஒரு டீம் எடுத்துவிட, திகைத்துப் போயினர் தோழர்கள். ‘சிறுமி இறந்ததும், அய்யஹோ, அய்யஹோன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது மார்க்சிஸ்ட் கட்சி. 

ஆனால் அதை செய்த குரூரன் அதே கட்சிக்காரனாய் இருந்திப்பதை பாருங்கள் மக்களே. இதுதான் அக்கட்சியின் லட்சணம்.’ என்று எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் போட்டனர் அவர்கள். கதிகலங்கிய மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பழைய ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்துவிட்டு, ‘சந்தோஷ்குமார் எங்கள் இயக்கத்தில் இருந்ததில்லை. தேர்தல் நேரத்தில் , எங்களை அசிங்கப்படுத்திடும் நோக்கத்திலேயே சிலர் இப்படியொரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். கோயமுத்தூர் தொகுதியில் எங்களின் வேட்பாளரிடம் பி.ஜே.பி. தோற்கும் நிலையில் உள்ளதால் இப்படியொரு பொய்யை பரப்புரை செய்கிறார்கள்!’ என்று பதில் தந்தனர் சூடாக.

அதேவேளையில், சிறையிலிருக்கும் சந்தோஷ்குமார் இந்து அமைப்புகளில் இருந்தவன்! என்று புதிதாய் ஒரு டீம் தகவல் கிளப்ப துவங்கியிருக்கிறது. தகவல் உண்மையாய் இருக்கையில் அதை வெளியிடுவதில் தப்பில்லை. ஆனால் கேவலம் அரசியலுக்காக இப்படியான பொய்க் கதைகளை கட்டிவிடுவதுதான் கேவலம்!

click me!