காரில் இருந்து வந்த முனகல் சத்தம்! கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்

By vinoth kumarFirst Published Aug 11, 2022, 7:55 AM IST
Highlights

கடுமையாக தாக்கியும், அவரது ஆடைகளை களைய செய்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தோம். முதலில் விபாச்சார தொழில் செய்யும் பெண் என்று நினைத்தோம். இறுதியில் கணவருக்கு தெரியாமல் கால் டாக்சி டிரைவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. 

சென்னை போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 6ம் தேதி கத்தி முனையில் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  சந்தோஷ் (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் படியும் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் மீது கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இதையும் படிங்க;- மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேர் அளித்த வாக்குமூலத்தில்:- நாங்கள் வழக்கமாக இரவு நேரத்தில் சாலையோரம் உள்ள நியாயவிலை கடையின் கட்டிடத்தின் மீது மது குடித்தபடி கஞ்சா அடிப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் ஒன்றாக கஞ்சா அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கால் டாக்சி ஒன்று வெகுநேரம் சாலையோரம் நின்றது. இதை பார்த்த நாங்கள் அந்த காரின் அருகே சென்றுபோது, கார் மட்டும் அசைவதை கவனித்தோம். நாங்கள் கஞ்சா போதையில் இருந்ததால் காரின் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்த போது, கார் டிரைவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்டோம். காரின் கதவை தட்டி வெளியே வாருங்கள் என்று அழைத்தோம்.

அப்போது காரில் இருந்த பெண் எந்தவித பதற்றமும் இல்லாமல் கதவை தட்டிய எங்கள் நண்பனை சரமாரியாக அடித்துள்ளார். பிறகு காரில் இருந்த டிரைவரும் எங்களை தாக்கி விட்டு காரில் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து,  கார் டிரைவரை அடித்து கீழே தள்ளிவிட்டு கத்தி முனையில் கடத்தி சென்றோம். அப்போது நாங்கள் கஞ்சா போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பெண்ணை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, அவரை கடுமையாக தாக்கியும், அவரது ஆடைகளை களைய செய்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தோம். முதலில் விபாச்சார தொழில் செய்யும் பெண் என்று நினைத்தோம். இறுதியில் கணவருக்கு தெரியாமல் கால் டாக்சி டிரைவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. 

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு! புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ! கதறிய கணவர் தற்கொலை.. ஆடியோ வைரல்

பிறகுதான் நாங்கள் அந்த பெண்ணை உனது கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் காரிலேயே உல்லாசமாக இருக்கும் அளவுக்கு தைரியம் இருக்கிறது. இதனையடுதத்து, கஞ்சா போதையில் இருந்த நண்பர்கள்  கை மற்றும் கால்களை பிடித்துக்கொண்டு கொடூரமான முறையில் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். தோடு இல்லாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின் உள்பட எட்டு சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டோம். கார் கதவை தட்டிய நபரை அந்த பெண் அடித்ததால் அவன் மட்டும், ஆத்திரத்தில் மீண்டும் இளம்பெண்ணுடன் ஒன்றாக இருந்தான். அப்போதுதான் போலீசார் டார்ச் லைட் அடித்தபடி எங்களை நோக்கி வந்தனர். அதை பார்த்து நாங்கள் தப்பி ஓடிவிட்டோம். ஆனால் பெண்ணுடன் இருந்த நபர் தப்பித்து ஓட முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். இதனால் எங்களை போலீசார் எளிதில் பிடித்துவிட்டனர் என்றனர்.

click me!