டெல்லியில் பட்டப்பகலில் பேங்க் கொள்ளை... அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு!

Oct 13, 2018, 1:26 PM IST

டெல்லியில் பட்டப்பகலில் வங்கி நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துவாரகா பகுதியில் கார்ப்பரேஷன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று பிற்கல் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று வங்கிக்குள் நுழைந்தது.

பிறகு காசாளர் சந்தோஷ் குமாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இந்நிலையில் வங்கியின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாகிக்கியையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.