பஸ் நிலையத்தில் ஓபனா செக்ஸ் வைத்துக் கொண்ட இளம்ஜோடி ! முகம் சுழித்த பயணிகள் !

By Selvanayagam PFirst Published Sep 13, 2019, 10:25 PM IST
Highlights

ஈரோடு பேருந்து நிலையத்தில் போதையில் இளம் ஜோடி ஒன்று பகிரங்கமாக செக்ஸ் வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஈரோடு பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்களை போலீசார் கண்காணித்து ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மறு பக்கம் காதல் ஜோடி மற்றும் கள்ளக்காதல் ஜோடியினரும் தங்களது செக்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக ஈரோடு மினி பஸ் நிலையத்தில் நடக்கும் சமூக விரோத செயல்கள் ஏராளம்... இதை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

மினி பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வருவது போல் சில ஜோடிகள் வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அங்கும், இங்கும் நோட்ட மிட்டு செக்ஸ் குறும்பில் ஈடுபடுவதை பலர் பார்த்து முகம் சுழித்து உள்ளனர்.

பொதுவாக மினி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் வராததால் அவர்களுக்கு இது வசதியாகப் போகிறது. இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையில் நேற்று இரவு ஒரு இளம் ஜோடி மிகவும் வரம்பை மீறி நடந்து கொண்டது.

நேற்று இரவு 11 மணி அளவில் ஈரோடு மினி பஸ் நிலையத்துக்கு ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் வந்தார். இருவரும் போதையில் இருந்தனர்.
பஸ் ஏற வந்தது போல் வந்த இவர்கள் பிறகு மினி பஸ் நிலையத்தில் திடீரென படுத்து கொண்டனர். அதன் பிறகு தான் அவர்கள் வரம்பு மீறி நடக்க தொடங்கினர். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் போதை வேறு..

அந்த பெண் முதலில் வாலிபர் மீது கையை போட்டு அணைத்தார். அந்த வாலிபர் கையை எடுத்து அப்புறப் படுத்தினாலும் அந்த போதை பெண் விடவில்லை. மீண்டும்... மீண்டும் அந்த வாலிபரை உசுப்பேற்ற சிறிது நேரத்தில் அந்த வாலிபரும் அந்த பெண்ணை அணைக்க சுமார் 1 மணி நேரம் அந்த ஜோடி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்து முகம் சுழித்து அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!