சியர்ஸ் கேர்ள்ஸ்களுடன் செக்ஸ்....தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்...

By Muthurama LingamFirst Published Apr 13, 2019, 10:38 AM IST
Highlights

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகி யுள்ளது. அவரது செல்போனில் இருந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.களை வைத்து அவர் குற்றவாளிதான் என்று நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகி யுள்ளது. அவரது செல்போனில் இருந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.களை வைத்து அவர் குற்றவாளிதான் என்று நீதிபதிகள் உறுதி செய்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், அலெக்ஸ் ஹெப்பர்ன் (Alex Hepburn ). 23 வயதான இவர், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு வொர்சஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்காக ஆல்ரவுண்டராக  கிரிக்கெட் விளையாடி வந்த இவர், சிட்டி சென்டர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வெளியில் சென்று வந்த இவர், பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறப்பட்டது. அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன்கருதி அவர்  யார் என்பது வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு, மத்திய இங்கிலாந்தில் உள்ள வொர்சஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவரது செல்போனைக் கைப்பற்றி சோதனை செய்ததில் ஹெப்பர்ன் நூற்றுக்கணக்கில் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை தனது நண்பர்களுக்கு அனுப்பியிருந்ததும், சியர்ஸ் கேர்ள்ஸ் பலருடன் அவர் செக்ஸ் வைத்திருந்ததும் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை வரும் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

click me!