காந்தி லலித்குமார் தற்கொலைக்கு முன்பு நிலானியிடம் பேசும் கடைசி ஆடியோ! அதிர்ச்சி தரும் உரையாடல்...

Sep 19, 2018, 12:21 PM IST

காதலியான நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி,  நிலானி நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள், காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நிலானி, மயிலாப்பூர் காவல்நிலையத்தில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்துள்ளார்.

நிலானி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  

இதனையடுத்து காந்தி லலித்குமார்  தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக  நிலானியிடம் பேசும் கடைசி ஆடியோ வெளியாகி அதிர்ச்சி தரும் உரையாடல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.