குடும்ப தகராறில் அத்துமீறிய கணவன்.. திடீரென்று கணவனை ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம் !

Published : Sep 28, 2022, 08:48 PM IST
குடும்ப தகராறில் அத்துமீறிய கணவன்.. திடீரென்று கணவனை ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம் !

சுருக்கம்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் பகுதியில் அமைந்துள்ளது அம்ளிஸ்வர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான். இவருக்கு வயது 40 ஆகும். இவரது மனைவி பெயர் சங்கீதா. இவருக்கு 30 வயதாகிறது. திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக்கு மிக முக்கிய காரணம், மனைவியின் கறுமை நிறத்தை வைத்து திட்டுவதனால் தான் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவன் ஆனந்த் சோன்வான் மீண்டும் தனது மனைவியின் நிறத்தை வைத்தே கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமாகி, பொறுமை இழந்த மனைவி சங்கீதா அவரை திட்டியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது கணவர் ஆனந்தை வெட்டியுள்ளார்.

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

இருப்பினும் கோபம் தீராத சங்கீதா, மற்றொரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..செப்டம்பர் 29 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!