8 வயது சிறுவனை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் பார்சல் செய்த இளம்பெண்; கும்மிடிபூண்டியில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Dec 20, 2023, 11:10 PM IST
Highlights

கும்மிடிப்பூண்டி அருகே சிறுவன் கொலை பெண் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்ணுடன் தொடர்பு உடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக, ஆந்திரா எல்லையை ஒட்டி மாதர்பாக்கம் அருகே அமைந்துள்ளது பல்லவாடா கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 16ம் தேதி மாலை சுரேஷ் - சிந்துமதி தம்பதியரின்  மகன் அனிஷ் (வயது 8) திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர். 

அதே சமயத்தில், பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிறுவன் அனிஷ்  சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 17-ஆம் தேதி மாயமான சிறுவனை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும் என கிராம மக்களும், உறவினர்களும் பாதிரிவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், சிறுவனை கடத்தியதாக கூறப்படும் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ரேகாவை (32) பிடித்து போலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் சிறுவன் அனிஷ்சை இளம்பெண் ரேகா மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து பிணமாக மூட்டையில் கட்டி  ஆந்திரமாநிலம் புஜ்ஜி நாயுடு கண்டிகை அருகே ஒரு முள்புதரில் வீசியிருந்ததை  போலீசார் கண்டறிந்து உடலை மீட்டனர். 

பாதாள சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன்; பொதுமக்களுடன் சேர்ந்து திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏ

சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். சிறுவன் அனிஷை இளம்பெண் ரேகா   மற்றொரு நபருடன் சேர்த்து கடத்தி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை போலீசார் நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்முடிக்கு அமைச்சர் பதவி மட்டுமல்ல எம்எல்ஏ பதவியும் காலியாகிடும் - வானதி சீனிவாசன் கருத்து

இந்த நிலையில் கொலை செய்த ரேகாவிடம் பல செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில் கொலைக்கான காரணம் மற்றும் இவருடன் கொலையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. அதேபோல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், உறவினர்களும் மதர்பாக்கம் சத்தியவேடு நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

click me!