
Youtube பிரபலங்கள் பலரும் தற்பொழுது தொடர்ச்சியாக சினிமா துறையில் அறிமுகமாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இயக்குனர் செல் ஆம் என்பவர் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் பிரபல Youtuber டிடிஎஃப் வாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. "மஞ்சள் வீரன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அவருக்கு போட்டியாக யூடியூப் மூலம் பிரபலமான மற்றொரு இளைஞரான "காத்து கருப்பு" கலை நடிக்கும் புதிய படம் ஒன்று தற்பொழுது உருவாகி வருகிறது. அந்தப் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க புதுமுக நடிகை ஒருவர் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கான பூஜை தற்பொழுது நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் பட குழுவை சேர்ந்த ஒருவர் காத்து கருப்பு கலைதான் அடுத்த தளபதி என்று கூறி அவரை அறிமுகம் செய்து அதிர்ச்சியை கிளப்ப, அந்த படத்தில் ஒரு வசனத்தை பேசி காட்டிய கலை, இந்த வசனம் இந்த திரைப்படத்தில் இருந்ததால் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசிய அந்த வசனம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
புதுமுகங்கள் சினிமாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், திறமை இல்லாத பலருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக பலரும் தங்கள் வருத்தத்தை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.