யாஷிகா கார் விபத்துக்கு இது தான் முக்கிய காரணம்..! ஆண் நண்பரின் பகீர் வாக்குமூலம்..!

By manimegalai aFirst Published Jul 31, 2021, 10:48 AM IST
Highlights

கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடிகை யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன், நண்பர்களுடன் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னை வந்த போது... யாஷிகா உள்ளிட்ட அவரது நண்பர்கள் வந்த சொகுசு கார் விபத்துக்குளானதில், அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்போது யாஷிகா, மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடிகை யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன், நண்பர்களுடன் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னை வந்த போது... யாஷிகா உள்ளிட்ட அவரது நண்பர்கள் வந்த சொகுசு கார் விபத்துக்குளானதில், அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்போது யாஷிகா, மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் என்பவர், யாஷிகாவின் கார் விபத்து குறித்து முக்கிய தகவல்களை போலீசாரிடம் வாக்கு மூலமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் விபத்து நடந்த இடத்தில இல்லை என்றாலும், விபத்து நடந்த ஒரு சில மணிநேரங்களிலேயே இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, யாஷிகா மற்றும் அவர்களது நண்பர்களை முதலில் சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அது மட்டும் இன்றி இறந்த வள்ளி செட்டி பவானியின் உடலையும் இவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் போலீசாரிடம் இந்த விபத்து குறித்து கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், விபத்துக்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டியது தான் என தெரிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்தது முதல், அதற்க்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த பல்வேறு தகவல்களை யாஷிகாவின் ஆண் நண்பர் போலீசாரிடம் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இடது பக்கத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த தோழி வள்ளி செட்டி பவணியும், பின் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த சையது மற்றும் அமீர் அமர்ந்துள்ளனர். 4 பேருமே மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 11 மணி அளவில் சென்னையை நோக்கி பயணித்துள்ளனர்.

அதிவேகமாக வந்த கார் ஒரு நிலையில் யாஷிகாவின் கட்டுப்பாட்டை மீறி சூளேறிக்காடு பேருந்து நிலையத்தை கடந்ததுமே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கே படுகாயம் அடைந்துள்ளனர். இதில் யாஷிகா ஆனந்த், சையது, அமீர் ஆகியோர் அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் மேற்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் யாஷிகா ஆனந்த் கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் வேகத்தடை மற்றும் சிசிடிவி காட்சிகள் இல்லை என்று கூறப்படும் நிலையில், யாஷிகா ஆனந்த் குடிபோதையில் இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 

click me!