நீங்க இன்னும் திருந்தலையா? அமெரிக்காவில் தனுஷை நறுக்குன்னு கேட்ட ஐஸு, வெட்டிவிட்ட தனுஷு..

By Ganesh RamachandranFirst Published Jan 21, 2022, 5:49 PM IST
Highlights

பிரச்னையோடவே அமெரிக்காவுல இருந்து அவங்க ரிட்டர்ன் ஆனாலும் ரெண்டு பேருமே அதை வெளியில் காட்டிக்கலடெல்லிக்கு எல்லாருமே ஒண்ணா போனாலும் கூட ஐஸ்-தனுஷுக்கு இடையில் யுத்தம் நடக்கிறது ரஜினிக்கு நல்லாவே தெரியும்.

இன்னும் ஐ.நா. சபையில் தீர்மானம் இயற்றாதது ஒண்ணுதான் பாக்கி. மற்றபடிக்கு, பிரிஞ்சு நிற்கும் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேரணும்னு ஊரே, நாடே, உலகமே கெஞ்சிக் கதறிட்டு இருக்கிறதா பொத்தாம் பொதுவா ஒரு தகவல் உலா வருது.

அது கெடக்கட்டும்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையில் ‘பிரிஞ்சுடுவோம்’ அப்படிங்கிற அளவுக்கு பிரச்னை பஞ்சாயத்து உருவான இடமாக அமெரிக்காவை சுட்டிக்காட்டி ஒரு தகவல் உலா வருது. அதன் விவரிப்புகள் இதோ….

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதென்பது வெளியுலகத்துக்கு இப்போது தெரிந்திருக்கிறது. ஆனால் ரஜினி உள்ளிட்ட இரு குடும்பத்தினருக்கும் சில வாரங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. பொதுவாக மகள்களின் விருப்பத்துக்கு குறுக்கே என்றுமே நின்றதில்லை அவர். இருவரது திருமணங்களே அதற்கான சாட்சி. ஆனால், ஐஸ்வர்யாவுக்கு வளர்ந்த மகன்கள் இருவர் இருப்பதை ரஜினி ரொம்பவே யோசித்திருக்கிறார். அதனாலேயே மகள் ஐஸ்வர்யாவிடம் பல முறையும், மாப்பிள்ளை தனுஷிடம் சில முறையும் பேசியிருக்கிறார். ஆனால் இருவருமே ‘எங்களால இனி சேர்ந்து வாழ முடியாது!  அது தொடர்ந்தா தினம் தினம் யுத்தம்தான். இதனால எல்லார் நிம்மதியும் போயிடும்!’ என்று  பிடிவாதமாக நிற்கவே, ரஜினி வேறு வழியில்லாமல் பிரிவுக்கு வழிவிட்டுள்ளார்.

ஏன் பிரிவு? என்பது பற்றி கிடைக்கும்  முக்கிய தகவல்கள் சில “தனுஷை  தான் லவ் பண்றதா ஐஸ்வர்யா சொன்னப்ப அந்தஸ்து, சாதி, சொத்துன்னு எதையுமே பார்க்கல ரஜினி. ஐஸு சொல்லிட்டா, அப்பா ஏத்துக்கிட்டார் அவ்வளவுதான். அந்த திருமணத்துக்குப் பிறகு கஸ்தூரி ராஜா கூட ரெகுலர் டச்லேயும் ரஜினி இருந்ததில்லை. அவர் வழக்கம்போல தனக்கான உலகத்திலேயே இருந்தார். ஆனால் தனுஷோட நல்லது, கெட்டது  எல்லாமே ரஜினியின் கவனத்துக்கு ரெகுலரா போயிட்டே இருந்துச்சு.

ஒரு நடிகன், அதிலும் பிரபல நடிகன் எங்கேயேல்லாம் வழுக்கி விழுறதுக்கு வாய்ப்புகள் இருக்குது!ன்னு ரஜினிக்கு நல்லாவே தெரியும். தனுஷை அப்படியான விஷயங்கள் சூழ்ந்தப்பவும், தனுஷே அப்படியான சூழலை விரும்பி அமைச்சப்பவும் ரஜினி அதை துல்லியமா ஸ்மெல் பண்ணினார். ஆனால், ஒரு நாளும் அதை கோபத்தோடோ, கேவலமாகவோ அவர் டீல் பண்ணியதில்லை. மிக நாகரிகமாதான் அட்வைஸ் பண்ணினார், அலர்ட் பண்ணினார்.

கொஞ்சம் ஓப்பனா இந்த விஷயங்களை சொல்றதா இருந்தால் ‘3’ பட ஷூட்டிங்கில் தனுஷ் மற்றும் ஸ்ருதிக்கு இயக்குநர் ஐஸ்வர்யாவின் கண் எதிரே உருவான நெருக்கம் அதுக்கு அப்புறமும் தொடர்ந்துச்சு. ஐஸ்வர்யாவை ரொம்பவே பாதிச்ச விஷயம் அது. ரெண்டு பேரோட நெருக்கத்தை ஐஸ்வர்யாவாலே உடைக்கவே முடியலை. இந்த விவகாரத்தை ரஜினிட்ட சொன்னப்ப அவர் கொஞ்சம் ஆதங்கப்பட்டிருந்தாலும் அவருக்கும், கமலுக்குமான பல வருட நட்பு சிதைஞ்சிருக்கும். ஆனால் முள் மேலே விழுந்த வேட்டியை ரொம்ப கவனமா எடுத்தார். தானாவே தனுஷ், ஸ்ருதி நெருக்கம் விலகுச்சு.

ஆனால் வேட்டி அடிக்கடி தானாகவே போயி முள்ளில் சிக்குச்சுன்னா என்ன பண்றது? அடுத்து அமலாபால்  விவகாரம் ரொம்பவே அதகளப்பட்டுச்சு.  இதெல்லாமே வீட்டுக்குள் பூகம்பமானாலும் தனுஷோட கேரியரை ரஜினி குடும்பம் ஒரு நாளும் தொந்தரவு பண்ணியதே இல்லை. அதனாலதான் அடுத்த படத்துலேயும் அமலாபாலே ஹீரோயினாக நடிக்க சம்மதிச்சுது குடும்பம்.

இந்த குழப்பங்களெல்லாம் இப்படி போயிட்டே இருந்தாலும், தனுஷ் நடிக்கிற ஹாலிவுட் பட ஷூட்டிங்குக்காக ஃபேமிலியோட அமெரிக்காவுல சில வாரங்கள் தங்கினார். அப்ப அவர் கூடவே இருந்துச்சு ஐஸ்வர்யா. துவக்க நாட்கள்ள அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாவேதான் இருந்தாங்க. ஆனால்  போகப்போகதான் சிக்கல் உருவாச்சு. தனுஷ் ஷூட்ல இருந்தப்ப அவரோட மொபைல் ஐஸ்வர்யா கையில்தான் இருந்திருக்குது. அப்ப ஒன்றிரண்டு  நடிகைகளிடமிருந்து அடிக்கடி போன்கால்களும், மெசேஜ்களும் பர்ஷனலா வந்துச்சு. ஐஸ்வர்யா அட்டெண்ட் பண்ணி பேசினால் எதிர்முனையில் பேசாமல் தவிர்த்ததும், இதுக்கெல்லாம் தனுஷ் சரியா விளக்கம் கொடுக்காமல் போனதுமே இரண்டு பேருக்குள் விரிசலை பெருசாக்கி ‘நீங்க இன்னும் திருந்தலையா? பசங்க வளர்ந்துட்டாங்க’ அப்படின்னு ஐஸ்வர்யாவை பேச வெச்சிருக்குது.

பிரச்னையோடவே அமெரிக்காவுல இருந்து அவங்க ரிட்டர்ன் ஆனாலும் ரெண்டு பேருமே அதை வெளியில் காட்டிக்கல. சமீபத்துல தனுஷ் ரெண்டாவது தேசிய விருதை வாங்கினப்ப கூட அதை கொண்டாடிதான் ட்விட் பண்ணுச்சு ஐஸ்வர்யா. டெல்லிக்கு எல்லாருமே ஒண்ணா போனாலும் கூட ஐஸ்-தனுஷுக்கு இடையில் யுத்தம் நடக்கிறது ரஜினிக்கு நல்லாவே தெரியும்.  இரண்டாவது பொண்ணு மாதிரியே மூத்த பொண்ணும் விவாகரத்து ரூடல் போறான்னு தெரிஞ்சதுமே ரொம்ப டல்லாயிட்டார்.” என்று நீள்கிறது அந்த விளக்கம்.

என்னவோ பா! இந்த கொரோனா காலத்துல இந்தக் கொடுமை வேற!

click me!